வியாழன், 29 செப்டம்பர், 2011

Zonal Council at Pondichery

வேலூர் கோட்டம் வெற்றிகரமாக நடத்திக்காட்டிய தென்னிந்திய மண்டல மாநாடு.
                                 
                                   பாண்டிச்சேரியில் கடந்த 24 மற்றும் 25 தேதிகளில் நடந்த மாநாடு மாபெரும் வெற்றி. தோழர் ஆனந்த் இம்முறையும் அமோக வாக்கு வித்தியாசத்தில் மண்டல செயலாளராக தெரிவு செய்யப்பட்டிருப்பது சங்கத்துக்கு பலம் சேர்க்கும்.
                                திருநெல்வேலி கோட்ட பொது செயலாளர் தோழர் ஜே.கார்த்திக் ராஜா மண்டல தலைவராக தேர்வு செய்யப்பட்டு ஒரு புதிய தலைமைக்கு சங்கத்தை அழைத்து செல்ல இருக்கிறார். தோழர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் போட்டியிடாததால் மதுரை முன்னாள் தலைவர். தோழர் மரியா வில்லியம் துணை தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
                                மாநாட்டை ஆரம்பித்து வைத்து பேசிய புதுவை முதல்வர் மாண்புமிகு ரெங்கசாமி மிக எளிமையாக பேசினார். டாக்டர் ராமதாஸ் முன்னாள் மக்களவை உறுப்பினர் சிறப்பான அறிவுரைகளுடன் தற்போதைய பொருளாதார விஷயங்கள் குறித்து பேசினார்.
                               49 க்கும் அதிகமான தோழர்கள் பொது விவாதத்தில் கலந்து கொண்டனர். பொது விவாதத்தில் பேச அனுமதி கேட்ட தஞ்சை கோட்ட பொதுசெயலாளர் தோழர் மூர்த்தி யின் கோரிக்கை மறுக்கப்பட்டது. அதற்காக மேடை முன் சென்று சர்ச்சை ஏற்படுத்தியிருக்க வேண்டாம்.
                              சங்க சரித்திரத்தில் தாக்கம் ஏற்படுத்திய முன்னாள் தலைவர்கள் இம்முறையும் பேச அனுமதிக்கப்பட்ட போது தற்கால நடைமுறைகள் தெரியாமல் பேசி தர்ம சங்கடபடுத்தியது இன்னும் தொடர்ந்ததது. இதற்கு அகில இந்திய தலைவர் தோழர் நாகேஷ் பதில் கூறியது இன்னும் அசிங்கம். அகில இந்திய பொதுசெயலாளர் போல பதில் கூற இன்னும் இவர்கள் பல கல் தொலைவு செல்ல வேண்டும்.
                             
                             முதல் நாள் இரவு பாடல் நிகழ்ச்சி நல்ல ஆடல் நிகழ்சியாகியது. ஆவேசமான போராட்டங்கள் இல்லாததால் அடக்கி வைத்த ஆவேசத்தை தணிக்க நல்ல ஒரு நிகழ்ச்சிதான்.

                             இன்னும் இரண்டு வருடம் புதிய பாதைகள் உருவாக வாழ்த்துக்கள்.

                                தங்கும் இடம் சாப்பாடு எல்லாம் நன்றாக இருந்தது.