ஞாயிறு, 30 அக்டோபர், 2011
சனி, 15 அக்டோபர், 2011
திருநெல்வேலி கோட்ட புதிய பொறுப்பாளர்கள் முதல் நிர்வாக சந்திப்புக்காக கோட்ட அலுவலகம் சென்றிருந்தபோது கோட்ட இன்சுரன்ஸ் ஊழியர் சங்க நிர்வாகிகள் வாழ்த்துகளுடன் பரிசாக நல்ல புத்தகங்களையும் வழங்கி மகிழ்ந்தனர். தோழர் முத்து குமாரசாமியுடன் தோழர்கள் ஜே.கார்த்திக் ராஜா(மண்டல தலைவர்) புதிய தலைவர். சுகுமார், புதிய கோட்ட பொது செயலாளர் கே.பிரசாத், மாறும் இணை செயலாளர்கள் செல்லசாமி , ரவி .... தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக.... தொழிற்சங்க ஒற்றுமை ஓங்குக..
வியாழன், 29 செப்டம்பர், 2011
Zonal Council at Pondichery
வேலூர் கோட்டம் வெற்றிகரமாக நடத்திக்காட்டிய தென்னிந்திய மண்டல மாநாடு.
பாண்டிச்சேரியில் கடந்த 24 மற்றும் 25 தேதிகளில் நடந்த மாநாடு மாபெரும் வெற்றி. தோழர் ஆனந்த் இம்முறையும் அமோக வாக்கு வித்தியாசத்தில் மண்டல செயலாளராக தெரிவு செய்யப்பட்டிருப்பது சங்கத்துக்கு பலம் சேர்க்கும்.
திருநெல்வேலி கோட்ட பொது செயலாளர் தோழர் ஜே.கார்த்திக் ராஜா மண்டல தலைவராக தேர்வு செய்யப்பட்டு ஒரு புதிய தலைமைக்கு சங்கத்தை அழைத்து செல்ல இருக்கிறார். தோழர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் போட்டியிடாததால் மதுரை முன்னாள் தலைவர். தோழர் மரியா வில்லியம் துணை தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
மாநாட்டை ஆரம்பித்து வைத்து பேசிய புதுவை முதல்வர் மாண்புமிகு ரெங்கசாமி மிக எளிமையாக பேசினார். டாக்டர் ராமதாஸ் முன்னாள் மக்களவை உறுப்பினர் சிறப்பான அறிவுரைகளுடன் தற்போதைய பொருளாதார விஷயங்கள் குறித்து பேசினார்.
49 க்கும் அதிகமான தோழர்கள் பொது விவாதத்தில் கலந்து கொண்டனர். பொது விவாதத்தில் பேச அனுமதி கேட்ட தஞ்சை கோட்ட பொதுசெயலாளர் தோழர் மூர்த்தி யின் கோரிக்கை மறுக்கப்பட்டது. அதற்காக மேடை முன் சென்று சர்ச்சை ஏற்படுத்தியிருக்க வேண்டாம்.
சங்க சரித்திரத்தில் தாக்கம் ஏற்படுத்திய முன்னாள் தலைவர்கள் இம்முறையும் பேச அனுமதிக்கப்பட்ட போது தற்கால நடைமுறைகள் தெரியாமல் பேசி தர்ம சங்கடபடுத்தியது இன்னும் தொடர்ந்ததது. இதற்கு அகில இந்திய தலைவர் தோழர் நாகேஷ் பதில் கூறியது இன்னும் அசிங்கம். அகில இந்திய பொதுசெயலாளர் போல பதில் கூற இன்னும் இவர்கள் பல கல் தொலைவு செல்ல வேண்டும்.
முதல் நாள் இரவு பாடல் நிகழ்ச்சி நல்ல ஆடல் நிகழ்சியாகியது. ஆவேசமான போராட்டங்கள் இல்லாததால் அடக்கி வைத்த ஆவேசத்தை தணிக்க நல்ல ஒரு நிகழ்ச்சிதான்.
இன்னும் இரண்டு வருடம் புதிய பாதைகள் உருவாக வாழ்த்துக்கள்.
தங்கும் இடம் சாப்பாடு எல்லாம் நன்றாக இருந்தது.
லேபிள்கள்:
lic,
nfifwi,
podichery,
trade union
புதன், 20 ஜூலை, 2011
தோழர் மீனாட்சி சுந்தரம்.......!!!!
தோழர் மீனாட்சி சுந்தரம்.......!!!!
--
மிகவும் நல்ல ஒரு நண்பர்.
களப்பணியாளர் கூட்டமைப்புக்கு பல நிலைகளில் ஒத்துழைப்பு
கொடுப்பவர்.. தலைமையேற்று நடத்துபவர்.
.நண்பர்களை மகிழ்விக்க சுய கொவ்ரவம் பார்க்காதவர்.
இப்படி பல பரிணாமங்களில் பார்த்திருக்கிறேன்.
அவரது தனிப்பட்ட வாழ்க்கையை நானும் கேட்டதில்லை.. அவர் கூட
யாரிடமும் கூறி வேறு நபர்கள் வழி கேள்விப்பட்டதுமில்லை.
எவ்வளவு பெரிய சோகத்தை உள்ளடக்கி ஒரு பொது வாழ்க்கையை
நடத்திக் கொண்டிருக்கிறார் என்று அறிந்த போது அதிர்ந்து போனேன்.
பல மரணங்கள் ... சில என்னை பாதித்து இருக்கிறது. சில என்னை
பக்குவமடைய செய்திருக்கிறது. சில மரணங்கள் என்னை எச்சரிக்கிறது.
ஆனால் இவரது மகனின் வாழ்வும் ஒன்றல்ல இரண்டு மகன்களையும்
எட்டு வயது ஆரம்பித்து பதினாறு வயதுவரை உச்சக்கட்ட மருத்துவம்
செய்தும் ஒரே நோய்க்கு காவு கொடுப்பது ஒருவருக்கல்ல அவரது
குடும்பத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரும் சோகம்..
கம்ப்யுட்டரில் உலாவி உலக விசயங்களை தந்தைக்கு சொல்லி உடல்
மட்டும் ஒத்துழைக்கா கொடிய ஒரு நோயுடன் மருத்துவமனைக்கும்
வீட்டுக்குமாய் அவரது அலைச்சல்களுக்கிடையில் மதுரை கோட்ட
பொது செயலாளர் ஆகவும்
அதுவும் அவரது காலத்தில் சங்கத்துக்காக ஒரு சொந்த கட்டிடத்தை
மதுரையில் அமைப்பதும்...
டெல்லி மும்பை போராட்டங்களுக்கு தோழர்களை தயார்படுத்தி
அழைத்து சென்றதும்..
இன்னும் சென்னை மண்டலத்தின் உதவிதலைவராக நீடிப்பதும்....
கற்பனை செய்ய முடியவில்லை.
குடும்பம் முழுவதுமே ஏற்றுகொண்ட மா பெரும் தியாகமாகவே
கருதுகிறேன்.
இயற்கை ஏன் தோழருக்கும் அவர்தம் குடும்பத்திற்கும் இத்தனை
வஞ்சனை செய்ததோ.
இத்தோடு அவர்களுக்கு ஆறுதலும் உற்சாகமும் தரட்டும்.
தோழருக்கும் அவர்தம் குடும்பத்தார்க்கும் உணர்ச்சிபூர்வமான இயக்க
வணக்கங்களும் வாழ்த்துக்களும்.......
--

திங்கள், 13 ஜூன், 2011
மரணம் தவம்....................?
நீ ரசித்ததை கொண்டே ஆறுதல் சொல்கிறேன். பல தவங்களின் முடிவு மனதை ஊடுருவுகிறது. நானும் அனுபவித்துள்ளேன்.
மரணம்.......
எல்லோருக்கும்
எழுதப்பட்ட சாசனம் !
உனக்கு மட்டும்
இல்லையென்று
எண்ணுவது நூதனம் !
மரணம் இரசி!
மரணித்தல் சுகம் !
சுகிக்காதவர்க்கு யுகம் !
மரணம் புசி!
வாழ்க்கை பந்தயம்
வெறும் மரணம் நோக்கித்தான்
என்பதுணர்!
மரணம் ஒரு தியானம் !
மரணம் ஒரு ஞானம் !
எல்லை மரணம் என்பதால்
இலக்கை காதலி !
உலக உருண்டை
உண்மையில் மரணத்தின்
திசையில் தானே
உருள்கிறது!
நிர்மூலமாவது
மெய்யென்றால்
மெய்யை பொய்யாக்கு !
மறுமுறை
உன் உடல் கதவை
உயிர் தட்டும்போது
மருத்துவரை அழைக்காதே
மரணத்தை அழை !
உடல் வேலி
உறுதியாய் இருந்தாலும்
இயற்கை
உயிர் உடைத்து
அழுகச் செய்யும் !
இன்னும் இருப்பவர்களை
அழச் செய்யும் !
உடலைப் புதுப்பிப்பதாய்
உள்ளோர் உளறிக் கொட்டினாலும்
அஸ்தி தான் அஸ்தம் ! அறி !
உடல் சுகிக்காத
உணர்வை
உயிர் சுகிக்கட்டும் !
மரணி !
பிரபஞ்சம்
உனக்குள் அடங்கும் !
தம்பி முத்துகுமரா இதற்குள் அமைதி அடைந்திருப்பாய்... ஆனாலும் அவ்வப்போது வந்து போவதை தடுக்கமுடியாது.
AGITATION AGAINST BRANCH MANAGER JAGADEESAN OF AMBAI BO
அம்பை கிளை வளர்ச்சி அதிகாரிகளை காட்டுமிராண்டிதனமாக நிர்வாகம் செய்யும் முது நிலை (?) கிளை மேலாளர் ஜெகதீசனை கண்டித்து கிளை தோழர்கள் மற்றும் திருநெல்வேலி கோட்ட பொறுப்பாளர்கள் இணைந்து அம்பை கிளை முன்பு மாபெரும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜெகதீசன் செய்த மாபெரும் சில்லறை தனங்களை ( நீச்சல் அடிக்க நீச்சல் குளமும் டென்னிஸ் ஆட மைதானமும் கேட்டது, முதல் நிலை அலுவலர் மற்றும் புதிய வளர்ச்சி அலுவலரின் உடல் குறைபாடுகளை சுட்டிக்காட்டும் போக்கு) உட்பட) சுட்டிக்காட்டி கோசங்கள் எழுப்பப்பட்டது. நிர்வாகம் தன்னை அம்பை கிளைக்கு மாற்றல் செய்ததை கண்டித்தும் இதுபோல் நிர்வாகம் செய்தால் தான் சீக்கிரம் இட மாறுதல் கிடைக்கும் என்பதே அவர் தரப்பு வாதமாகும். இதில் இன்னும் செஇறப்பு இவர் வளர்ச்சி அதிகாரி நிலையிலிருந்து பணிமூப்படைன்தவர். பொதுசெயலாளர் தோழர் கார்த்திக் ராஜா சொல்லும் பன்றி கதை தான் நினைவுக்கு வருகிறது.
வியாழன், 2 செப்டம்பர், 2010
உணவு கூப்பன் முறை.
எல் ஐ சி யில் நடந்து வரும் சம்பள பேச்சு வார்த்தையில் முக்கியமான ஒரு வேண்டுகோள் வைக்கப்பட்டது. அது மதிய உணவு கூப்பன் முறை.
நிறுவன ஊழியர்கள் ஒன்றை கேட்டால், ஒரு வேளை அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் நிவாகத்தின் உயர் மட்ட அதிகாரிகளுக்கும அதை தங்களுக்கு சாதகமாக உருவாக்கி கொள்வதும், ஊழியர்களுக்கு அதை பாதகமாக்கி விடுவதும் இயல்பே.
அந்த வகையில் இந்த கோரிக்கையானது பெரிய பட்டணங்களில் வேலை செய்பவர்களுக்கு மிக தேவையானதே. நகரின் அருகாமையில் வசிக்க முடியாத் சூழ்நிலையில் உணவு கொண்டு வருவது முடியாத காரியமே. அன்றாடம் சாப்பிட பணம் கிடைத்தால் நல்லது.
ஆனால் நடந்தது வேறு. sodexo என்ற நிறுவனத்துக்கும் இந்தியாவின் பெரிய சில்லறை வணிகர்களுக்கும் பெருவாரியான பலன் போய் சேர்ந்ததை தவிர
ஆனால் ஊரகபகுதி தோழர்களுக்கு இது இன்னுமொரு நலதிட்டமே. ஆனால் இதில் நிர்வாகம் அடைந்து கொண்டது ஒன்று இதை சாக்காக வைத்து அவர்களும் பலன் அடைவது, அதிலும் மனிதர்களுக்கு வயிறு ஒன்றுதான் ஆனால் இதில் வகுப்பு வாரியாக தொகை நிர்ணயம். இன்னொன்று வருகைப்பதிவேடை கம்ப்யுடர் மயமாக்குவது. இதை இதுகாறும் தொழிற் சங்கத்தினர் தடுத்து வந்திருந்தனர். இது நல்ல திட்டமா இல்லையா என்பதை காலம் வழக்கம் போல சொல்லி கொடுக்கும்.
நிறுவன ஊழியர்கள் ஒன்றை கேட்டால், ஒரு வேளை அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் நிவாகத்தின் உயர் மட்ட அதிகாரிகளுக்கும அதை தங்களுக்கு சாதகமாக உருவாக்கி கொள்வதும், ஊழியர்களுக்கு அதை பாதகமாக்கி விடுவதும் இயல்பே.
அந்த வகையில் இந்த கோரிக்கையானது பெரிய பட்டணங்களில் வேலை செய்பவர்களுக்கு மிக தேவையானதே. நகரின் அருகாமையில் வசிக்க முடியாத் சூழ்நிலையில் உணவு கொண்டு வருவது முடியாத காரியமே. அன்றாடம் சாப்பிட பணம் கிடைத்தால் நல்லது.
ஆனால் நடந்தது வேறு. sodexo என்ற நிறுவனத்துக்கும் இந்தியாவின் பெரிய சில்லறை வணிகர்களுக்கும் பெருவாரியான பலன் போய் சேர்ந்ததை தவிர
ஆனால் ஊரகபகுதி தோழர்களுக்கு இது இன்னுமொரு நலதிட்டமே. ஆனால் இதில் நிர்வாகம் அடைந்து கொண்டது ஒன்று இதை சாக்காக வைத்து அவர்களும் பலன் அடைவது, அதிலும் மனிதர்களுக்கு வயிறு ஒன்றுதான் ஆனால் இதில் வகுப்பு வாரியாக தொகை நிர்ணயம். இன்னொன்று வருகைப்பதிவேடை கம்ப்யுடர் மயமாக்குவது. இதை இதுகாறும் தொழிற் சங்கத்தினர் தடுத்து வந்திருந்தனர். இது நல்ல திட்டமா இல்லையா என்பதை காலம் வழக்கம் போல சொல்லி கொடுக்கும்.
லேபிள்கள்:
lic,
nfifwi,
trade union
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)