திங்கள், 13 ஜூன், 2011


மரணம் தவம்....................?
            நீ ரசித்ததை கொண்டே ஆறுதல் சொல்கிறேன். பல தவங்களின் முடிவு மனதை ஊடுருவுகிறது. நானும் அனுபவித்துள்ளேன்.

மரணம்.......

எல்லோருக்கும் 
எழுதப்பட்ட சாசனம் !

உனக்கு மட்டும் 
இல்லையென்று 
எண்ணுவது நூதனம் !

மரணம் இரசி!
மரணித்தல் சுகம் !
சுகிக்காதவர்க்கு யுகம் !

மரணம் புசி!
வாழ்க்கை பந்தயம் 
வெறும் மரணம் நோக்கித்தான் 
என்பதுணர்!

மரணம் ஒரு தியானம் !
மரணம் ஒரு ஞானம் !

எல்லை மரணம் என்பதால் 
இலக்கை  காதலி !

உலக உருண்டை 
உண்மையில் மரணத்தின் 
திசையில் தானே 
உருள்கிறது!

நிர்மூலமாவது 
மெய்யென்றால் 
மெய்யை பொய்யாக்கு !

மறுமுறை 
உன் உடல் கதவை 
உயிர் தட்டும்போது 
மருத்துவரை அழைக்காதே 
மரணத்தை அழை ! 

உடல் வேலி
உறுதியாய் இருந்தாலும்
இயற்கை
உயிர் உடைத்து
அழுகச் செய்யும் !
இன்னும் இருப்பவர்களை
அழச் செய்யும் !


உடலைப்  புதுப்பிப்பதாய்
உள்ளோர் உளறிக் கொட்டினாலும் 
அஸ்தி தான் அஸ்தம் ! அறி !

உடல் சுகிக்காத 
உணர்வை 
உயிர் சுகிக்கட்டும் !

மரணி !
பிரபஞ்சம்
உனக்குள் அடங்கும் !
தம்பி முத்துகுமரா இதற்குள் அமைதி அடைந்திருப்பாய்... ஆனாலும் அவ்வப்போது வந்து போவதை தடுக்கமுடியாது.

1 கருத்து:

  1. நன்றி! நண்பா! உன் கரங்கள் எனக்கு எப்போதும் கண்ணீர் துடைக்கும் ஆறுதல்கள் !

    பதிலளிநீக்கு